கடையனுக்கும் கதி மோட்சம் !
============================================================
தோழர். N. நடராஜன், AIBSNLPWA
தஞ்சை மாவட்டச் சங்க இதழ் ' கதிரவன் ' ஆசிரியர்குழு.
===============================================================
ஏசு, காந்தி, புத்தர், நபிகள்
காட்டிய நல் வழியினிலே
எப்போ, எவர்தான், வருவோரோ!
கடையனுக்கும் கதி மோட்சம்
காட்டிவிட்டுப் போவோரோ!!
உழைக்கும் மக்கள் யாவருமே
உண்மையான உயர்வு பெற
உதவிட இங்கு உதித்திடுவாரோ!
இனம், மொழி, மதத்தாலே
எல்லை கடந்த. இந்தியாவை
மத சார்பற்ற இந்தியா என
மார்தட்டிட வைப்பாரோ!
ஊழலற்ற அரசியல் வானில்
உதயமாகும் நட்சத்திரத்தை
கண்டுணர வைப்பாரோ!
உலகமே கண்டு வியக்கும்
அறிவியல் வழி அறிஞர்களை
அணி திரட்டிக் காட்டிடுவோரோ!!
ஏழை பணக்காரன் இடைவெளி குறைய
டிஜிட்டல் டிவைடு நிலையினை
மாற்றிடவே அவதரிப்பாரோ!!
இமயம் போல் இந்தியாவை
உயர்ந்து நிற்க வழி செய்வோம்!
ஒன்றிணைந்து செயல்படுவோம்!
நன்றி. என் கோரிக்கையை ஏற்றுக்கொண்மைகு.
ReplyDelete