LIVE

Sunday, December 30, 2018

இன்று போகும் 2018 நன்று பல செய்தது. 
வரப்போகும் 19 நன்று மட்டும் செய்யட்டும்.

தோழர். N. நடராஜன் அவர்கள்,
மாவட்டச் சங்க இதழ் "கதிரவன்" ஆசிரியர் குழு.
===========================================
இயற்கையின் சீற்றமும் 
இன்னபிற வினைகளும் 
பூமித்தாயின் மேனியில் 
உருவான வடுக்களுக்கும்  
காரணமான பதினெட்டே 
வருந்தி வழியனுப்பு கின்றோம்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் 
குண்டினை கண்டுபிடித்தாய்.
வடகொரியா - அமெரிக்காவின் 
பதட்டத்தையும் தனித்திட்டாய்!
செவ்வாயில் கால் பதித்து 
அறிவியலின் உச்சம் தொட்டாய்,

புவி வெப்ப மயமாதல்  
கூடாது ன்பதாலே
மரபு சாரா எரிசக்தி மாறுதலும்,
மறு சுழற்சி மகத்துவத்தால்
நாடு, நகரம் சுத்தமும்,
வேலைவாய்ப்பை தரவல்ல
விவேகத்தை உருவாக்கும் 
இரண்டாயிரத்து பத்தொன்பதே!
உன்னை நாங்கள் வரவேற்கின்றோம் !

கொடுமையான வறட்சியும் 
கடுமையான உற்பத்தியும் 
விவசாயிகளை வதைக்கிறதே!
வரும் ஆண்டில் இதற்கொரு 
வழியினைச் சொல்வாயா!

அரசியலில் ஆச்சரியங்களும்,
மடை திறந்த மாற்றங்களும் 
மகிழ்ச்சியைத் தந்திடவே 
மகிழ்ந்தளிப்பாய் புத்தாண்டே!

Sunday, December 23, 2018



கடையனுக்கும் கதி மோட்சம் !
============================================================
தோழர். N. நடராஜன், AIBSNLPWA
தஞ்சை மாவட்டச் சங்க இதழ் ' கதிரவன் ' ஆசிரியர்குழு.
===============================================================
ஏசு, காந்தி, புத்தர், நபிகள்
காட்டிய நல் வழியினிலே
எப்போ, எவர்தான், வருவோரோ!
கடையனுக்கும் கதி மோட்சம்
காட்டிவிட்டுப் போவோரோ!!

உழைக்கும் மக்கள் யாவருமே
உண்மையான உயர்வு பெற
உதவிட இங்கு உதித்திடுவாரோ!
இனம், மொழி, மதத்தாலே
எல்லை கடந்த. இந்தியாவை
மத சார்பற்ற இந்தியா என
மார்தட்டிட வைப்பாரோ!

ஊழலற்ற அரசியல் வானில்
உதயமாகும் நட்சத்திரத்தை
கண்டுணர வைப்பாரோ!
உலகமே கண்டு வியக்கும்
அறிவியல் வழி அறிஞர்களை
அணி திரட்டிக் காட்டிடுவோரோ!!

ஏழை பணக்காரன் இடைவெளி குறைய
டிஜிட்டல் டிவைடு நிலையினை
மாற்றிடவே அவதரிப்பாரோ!!
இமயம் போல் இந்தியாவை
உயர்ந்து நிற்க வழி செய்வோம்!
ஒன்றிணைந்து செயல்படுவோம்!


Tuesday, December 18, 2018

 
திரு. வருண் சக்கரவர்த்தி
மிகச் சிறந்த ஸ்பின் பௌலர்
==========================================
நமது தஞ்சை PGM திரு. சி.வி. வினோத் அவர்களின் மகன்
 இந்திய IPL 20  20 மேட்ச் பஞ்சாப் டீமுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

மிக அதிகமாக  8.41 கோடி மதிப்பில் 
தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் மிகச் சிறந்த ஸ்பின் பௌலர்.
27 வயது நிரம்பிய இவர் 9 மேட்ச்களில் 22 விக்கெட்களை 
வீழ்த்திய சாதனையாளர்.

Top Wicket Taker என்று பெயர் பெற்ற 
திருவாளர் வருண் 
மிகப் பெரிய ஜாக்பாட்டை வென்றிருக்கிறார்.

நமது தஞ்சையின் முதன்மை பொது மேலாளர் திரு. C.V. வினோத் அவர்களின் மகன்தான் திரு. வருண் சக்கரவர்த்தி என்று அறியும் போது பெரும் மகிழ்ச்சி. விருது பெற்ற வருண் அவர்களையும், வருணைப் பெற்ற நமது பொது மேலாளர் அவர்களையும் வணங்கி, வாழ்த்தி மகிழ்கிறோம்!
'மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை    
எந்நோற்றான்கொல் எனும் சொல்.’
என்ற வள்ளுவன் குறளுக்கேற்ப 
தவம் செய்த தந்தையை, தாயை  பெரிதும் பாராட்டி மகிழ்கிறோம்!

இவண்,
வி. சாமிநாதன்,
மாவட்டச் செயலர், தஞ்சை.
AIBSNLPWA 

Monday, December 17, 2018


சிறப்பாக நடைபெற்ற

ஓய்வூதியர் தின விழா!
======================
இன்று 17 12 2018 திங்கட்கிழமை இன்று நமது மாவட்டச்      சங்கத்தின்  சார்பில்  ஓய்வூதியர்  தின  கூட்டம் தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் காலை சரியாக 10 மணிக்கு தொடங்கி பகல் 1 30 வரை சிறப்பாக நடைபெற்றது
சுமார் 50க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள் பங்கு 
பெற்று கூட்டத்தை சிறக்கச் செய்தனர்.


இந்த சிறப்பு ஓய்வூதிய தின கூட்டத்தினை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தலைவர் மதுரை எம் ராஜேந்திரன் தலைமை ஏற்க, மாவட்ட செயலர் வி சாமிநாதன் வழி நடத்தினார்.
கௌரவத் தலைவர் தோழர் ஏகே தனபாலன் மற்றும் மாநில அமைப்புச் செயலர் பிரான்சிஸ் சேவியர் முன்னிலையில், முதல் நிகழ்வாக மதுரை எம் . ராஜேந்திரன் தலைவர் சங்க கொடியினை ஏற்றி வைக்க, சாமிநாதன் மாவட்ட செயலர் மற்றும் அய்யனார் இணைச் செயலர் விண்ணதிர கோஷமிட கூட்டம் இனிதே ஆரம்பம் ஆயிற்று.
தங்கம் சேவியர் கடவுள் வாழ்த்து பாட, தோழியர் எம் பத்மினி வரவேற்புரை ஆற்றினார்.
தலைவர் எம் ராஜேந்திரன் தனது முன்னுரையில் ஓய்வூதியர்கள் தின சிறப்பு பற்றி உரையாற்றி வாழ்த்துக்கள் கூறி நிறைவு செய்தார்.

தோழர் வி. சாமிநாதன் மாவட்ட செயலர் ஓய்வூதியர் தின முக்கியத்துவம் மற்றும் ஆரம்ப காலங்களில் இருந்து நடைபெற்ற நிகழ்வுகள் பற்றியும் சிறப்பானதொரு உரையாற்றினார்.

பிறகு K.அய்யனார் இணைச் செயலர் ஓய்வூதியர் தின காரண காரியங்களை விளக்கிப் பேச, மாநில அமைப்புச் செயலர் தோழர் பிரான்சிஸ் சேவியர், கௌரவ தலைவர் தோழர் கே தனபாலன் மற்றும் தோழர்கள் எம் இருதயராஜ், என் நடராஜன், என் பாலசுப்பிரமணியன் 2, ஜி பஞ்சாபிகேசன், தோழியர் மல்லிகா சுகுமாரன் ஆகியோர் ஓய்வூதிய தின சிறப்பு பற்றியும், வாழ்த்துக்களையும் கூறி உரையாற்றினார்கள். மாவட்டப் பொருளாளர் கே சீனு நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

தோழமை வாழ்த்துக்களுடன்,
V. சாமிநாதன்,

மாவட்ட செயலர், தஞ்சை.