LIVE

Wednesday, November 28, 2018

ஒரு பயனுள்ள தகவல்  
அமித் குமார் குப்தா, ஏஜிஎஸ். AIRBSNLWEA  அவர்களிடமிருந்து பெறப்பட்டது.
===============================================
பென்ஷன் வழங்குவதில் புதியமுறை
===============================================
ஓய்வூதியம் CCA க்கள் மூலம் முறைபடுத்தப்பட்டு   PFMS (பொது நிதி மேலாண்மை அமைப்பு) மூலம் நேரடியாக ஓய்வூதியம் பெறும் தனிநபர் வங்கிக் கணக்குகளில் வழங்கப்படும்.
டிஜிட்டல் லைஃப் சான்றிதழின் வடிவத்தில் வங்கிகளின்  இணையத்தளம் மற்றும் CCA  மூலம் ஜீவன் ப்ரமன் போர்ட்டல்  வழியாக வாழ்க்கைச் சான்றிதழ் ஓய்வூதியதாரரால் சமர்ப்பிக்கப்படும்
வழக்கமான முறை மூலம், அதாவது, ஓய்வூதியம் பெறும் நபர்களிடமிருந்து CCA மற்றும் வங்கிகளுக்கு தபால் மூலம் அனுப்பிய ஆயுள் சான்றிதழ். கையேடு (Manual)வாழ்க்கைச் சான்றிதழ்களை வழங்குவதற்கு முக்கிய வங்கிகளும் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த செயல்முறையும் நடைமுறையில் இருக்கும்
CTR (மத்திய கருவூல விதிகள்) விதி 343 பாரா 15.2 (i), ஒரு வாழ்க்கைச் சான்றிதழை தாக்கல் செய்யும் ஒரு ஓய்வூதியதாரர், தன்னால் பரிந்துரைக்கப்பட்ட எந்தவொரு நபரும் இணைப்பு XXII இல் கையொப்பமிட்டு இருந்தால்  அவருக்கு நேரடி வருகை இலிருந்து விலக்கு அளிக்கப்டுகிறது.
திட்டத்தை துவக்கும் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
திட்டத்தை செயல்படுத்தும் நடைமுறை
CPMS (விரிவான ஓய்வூதிய நிர்வகித்தல் முறை) என்பது தொலைத் தொடர்பு ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வங்கி கணக்குகளில் நேரடி ஓய்வூதியம் வழங்கும் ஒரு மென்பொருள் ஆகும். இது நான்கு தொகுதிகள் கொண்டது:
ஓய்வுபெறுபவர்களின் தொகுதி  (Retiree Module)

 அலுவலகம் தொகுதி தலைவர் (Head of Office Module )

ஓய்வூதியத் தொகுதி (Pension Module)

பிடிஏ தொகுதி (PDA Module)

ஓய்வூதிய செயல்முறையின் தலைமை நிர்வாக அதிகாரி (நிர்வாக பகுதிகள்) இல் ஓய்வூதிய செயல்முறை ஆரம்பிக்கப்படும், அதன் பின் ஓய்வுபெறுபவர் இணயத்தின் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும், CCA க்கள் ஓய்வூதிய தொகுதிகளின் வழியாக ஓப்புதல்  அளித்து அனுமதி வழங்குவர்.
E-PPO (டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்ட PPO) உருவாக்கப்பட்டு  ,அவருடைய மின்னஞ்சலில் அனுப்பப்பட்டு SMS மூலம் தெரிவிக்கப்படும் .அதன்பிறகு.  கிராஜூய்ட்டி, கம்முடேஷன் , ஓய்வூதியம் ஆகியவை . PFMS (பொது நிதி மேலாண்மை அமைப்பு) பிடிஏ தொகுதி (PDA Module)மூலமாக நிலுவை தொகை உட்பட வழங்கப்படும்
ஓய்வூதியர்  பெறும் நன்மைகள்

ஓய்வூதியம் இடைக்கால முகவர்கள் மூலம் நேரடியாக செலுத்தப்படாமல் உரிய நேரத்தில்  கிடைக்கும்
ஓய்வூதிய செயலாக்க முடிவுக்கு ஒற்றை சாளர அமைப்பு  ஆகும். ஓய்வூதியதாரர்களுக்கான ஆன்லைன்  மேலாண்மை குறை தீரக்கும் அமைபபு காகித வேலைகளை குறைத்து மற்றும் சரியான துயரம் குறைக்கும் அதிகாரத்தை அடைந்தது.
ஓய்வூதிய நிலையை வீட்டிலிருந்து அறிந்து கொள்ளலாம் .
ஓய்வூதியம் பெறுவோருக்கு ஓய்வூதியம் நிலுவை மற்றும் ஓய்வூதியத் திருத்தங்கள் விரைவாக கிடைக்கும்.
ஓய்வூதியம் துல்லியமாக கணக்கிடுவதால் குறைந்த தொகை  மற்றும் அதிக தொகை  கணக்கீடுகளின் குறைகளால் ஏற்படும் பிடித்தத்தை நிவர்த்தி செய்கிறது
லக்னோவில் பைலட் ரோல் அவுட்: நவம்பர் 2018

பிராந்திய கோர்டினேட்டர்களின் ரோல் அவுட்: நவம்பர் 2018

முழு ரோல் அவுட்: நவம்பர்-டிசம்பர் -2018

தற்போதுள்ள வங்கி ஓய்வூதியம் பெறுவோர் உள்வரவு: ஏப்ரல், 2019
தற்போதுள்ள அஞ்சல் ஓய்வூதியர் உள்வரவு: ஏப்ரல், 2019
வங்கி கணக்குகள் மூலம் தன்னார்வ அடிப்படையில் ஏப்ரல் 2019. இந்த தகவலை அளிததவர்ஸ்ரீ தாகலா லிண்டா யாதன், டிடிஜி (கணக்குகள்)
அனைத்து செயற்பாட்டாளர்களும்  மேலே சொல்லியவற்றை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். ஏனென்றால் இது ஒரு பெரிய மாற்றம்.
..... P.S.ராமன்குட்டி ......
ஏ ஐ பி எஸ் என் எல் ஓய்வூதியர் நல சங்கம் 
தஞ்சை மாவட்டம். 
அவசர செய்தி. 
=======================================================

தோழர்களே தோழியர்களே! 
            அனைவருக்கும் வணக்கம். அண்மையில் நமது தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கஜா புயலினால் கடுமையான சொல்ல இயலாத பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. உயிரை மட்டும் வைத்து, உடமைகளை பறித்துச்  சென்ற காட்சிகளை தினம் தினம் கேட்டும் கண்டும் வருகிறோம் .இந்த கஜா புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்ட தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் நாம் அனைவரும் பொருளுதவி வழங்கி அவர்களின் துயர் துடைக்க கடமைப்பட்டிருக்கிறோம். அவர்கள் நிலைமை சீராக இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும். நலிவுற்ற அந்த உள்ளங்களுக்கு நம்மால் முடிந்த பொருளுதவி, பண உதவி மற்றும் அனைத்து வகையான உதவிகளையும் செய்ய கடமைப்பட்டிருக்கிறோம் .நமது ஏ ஐ பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கம் அனைத்து பகுதியிலிருந்தும் கஜா புயல் நிவாரண நிதி வசூலித்து உதவிக்கரம் நீட்டி செயல்பட இருப்பதை கண்கூட காண்கின்றோம். இந்த வகையிலே நாமும் தஞ்சை மாவட்டச்  சங்கத்தின் உதவி கரத்தை நீட்ட கடமைப்பட்டுள்ளோம் .அந்த வகையிலே உங்கள் அனைவரையும் உங்களால் முடிந்த தொகையினை செலுத்தி இந்த புனித நற்காரியத்தில் இணையுமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் .இதுவரை நன்கொடையளித்த தோழர் தோழியர்கள் விவரங்கள் கீழே கொடுத்துள்ளேன். 

தோழியர் சி  பொன்னழகு ரூபாய் 10 ஆயிரம் 
தோழியர்  ஸ்ரீ சந்திரகுமாரி  ரூபாய் 6 ஆயிரம் 
தோழர் விஜயகுமார் ரூபாய் 5 ஆயிரம் 
தோழியர் கோமதி அசோக்குமார் ரூபாய் 5 ஆயிரம் 
தோழர் பாலகுமாரன் சந்திரா ரூபாய் 5 ஆயிரம் 
தோழியர் சாரதா சந்தானகோபாலன் ரூபாய் இரண்டாயிரம் 
தோழியர் எம் பத்மினி 2000 
தோழர் எஸ் விஜயகுமார் 2000 
B.புருஷோத்தமன் ரூபாய் 1000 
தோழியர் தங்கம் சேவியர் ரூபாய் 1000 
தோழர் டி செல்லமுத்து ரூபா 1000 ஆகியோர் 
இதுவரை நன்கொடை செலுத்தியிருக்கிறார்கள் . 
இது தவிர  உண்ணாவிரத போராட்ட தினத்தில் ரூபாய் 5 ஆயிரம் தோழர் தோழியர்கள் நன்கொடை செலுத்தியிருக்கிறார்கள் .இன்னும் நிறைய தோழர்களும் தோழியர்களும் கொடுத்தவண்ணம் இருக்கிறார்கள். உதவ விருப்பமுள்ள தோழர்களும் தோழியர்களும் கொடுத்து உதவ வேண்டுகோள் வைத்து அமைகிறேன். 

தோழமை வாழ்த்துக்களுடன், 
வி .சாமிநாதன், 
மாவட்ட செயலர், தஞ்சை.
Memorandum submitted  today to  Sri Pradhan, 
CCA TNCircle addressed to Secretary,  DOT,  NewDelhi. 
by
Comrades K. Muthialu, Deputy General Secretary,  
V. Ramarao, Tamilnadu Circle President, 
R.Venkatachalam, Tamilnadu Circle Secretary and  
S. Thangaraj, Circle Secretary , Chennai Telephone Circle. 
CCA sincerely interacted and shared his, views.



ஏ ஐ பி எஸ் என் எல் ஓய்வூதியர் நல சங்கம். 
தஞ்சை மாவட்டம். 
மாவட்ட மாநாடு அறிவிப்பு.
-------------------------------------------------------------------------------
தோழர்களே தோழியர்களே வணக்கம். 
நமது மாவட்ட மாநாடு வருகின்ற 10 12 2018 திங்கட்கிழமை
திரு இருதய மறைமாவட்ட பேராலய மக்கள் மன்றம் கல்லு குளம்
நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூரில் நடக்க இருக்கிறது. 
அதனுடைய அழைப்பிதழ் இத்துடன் இணைத்துள்ளேன்.
பார்த்து விவரங்கள் தெரிந்து கொள்ளவும். 
வழக்கம்போல் இரண்டாம் சனிக்கிழமை நடைபெறும் 
மாதாந்திரக்  கூட்டம் இந்த டிசம்பர் மாதம் மாவட்ட மாநாடு 
நடைபெறும் காரணத்தினால் நடைபெறாது. 
அனைத்து தோழர்களும் தோழியர்களும் கலந்துகொண்டு 
விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறேன். 
இத்துடன் நான்குபக்க அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.

கே. சாமிநாதன்,
மாவட்டச் செயலாளர்.
 ஏ ஐ பி எஸ் என் எல் ஓய்வூதியர் நல சங்கம் ,
தஞ்சை மாவட்டம்.
உண்ணாவிரதப் போராட்டம்.
======================
      மத்திய சங்கத்தின் அறைகூவலுக்கு இணங்க தஞ்சை அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கம் இன்று 22 11 2018 ல் உண்ணாவிரதப்  போராட்டத்தை நடத்தியது. தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் காலை சரியாக 10 மணிக்கு தொடங்கப்பட்ட உண்ணாநோன்பு மாலை 5 மணிக்கு முடித்து வைக்கப்பட்டது. சுமார் 85 தோழர்களும் தோழியர்களும் கலந்துகொண்டு  கடமையாற்றினர். மழையின் காரணத்தினாலும் அண்மையில் நடந்த கஜா புயலின் பின் விளைவுகளாலும் வெளியூர் தோழர்கள் கலந்து கொள்ள இயலாத நிலை இருப்பினும் 80க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 
மாவட்ட தலைவர் தோழர் ஏ கே டி அவர்கள் உண்ணாநோன்பிற்கு  தலைமையேற்க, மாவட்ட செயலர் வழிநடத்த, மாநில அமைப்புச் செயலர் முன்னிலையில் சிறப்பாக நடந்தேறியது. முதலாவதாக தலைவர் முன்னுரை நிகழ்த்திட தோழியர் சாரதா சந்தானகோபாலன் கடவுள் வாழ்த்து பாடல் பாட மூத்த தோழர் கே எஸ் கே அவர்கள் உண்ணாநோன்பினை தொடங்கி வைத்தார். தோழர் வி. சாமிநாதன்  விளக்க உரை அளிக்க முன்னதாக மறைந்த மத்திய ரசாயன மற்றும் நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் மாண்புமிகு அனந்தகுமார் அவர்களுக்கு நினைவாஞ்சலி செலுத்தப்பட, தோழர் கே. சந்தானகோபாலன் ,துணைத் தலைவர் உண்ணா நோன்பின் காரண காரியங்களை விளக்கி நாம் சாதனைகளைப் படைக்க என்ன என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விளக்கி பேசியதோடு அல்லாமல் அண்மையில் தஞ்சை மற்றும் நாகை மாவட்டத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் மற்றும் பாதித்த அனைவருக்கும் நன்கொடை மூலம் அவர்கள் தேவைக்கு உதவ வேண்டும் என்பதையும் விளக்கிப் பேசினார்.நமது மாநில மத்திய சங்கங்களும் இதற்கு உதவிட இரு கரங்கள் நீட்டி தயாராக உள்ளனர். இது சம்பந்தமான அறிவிப்பு இன்று மாலை தெரியவரும் என்று உரையை நிறைவு செய்தார். 
அடுத்து மாநில அமைப்புச் செயலர் தோழர் பிரான்சிஸ் சேவியர் உண்ணா நோன்பின் காரண காரியங்களை விளக்கிப் பேசி ஒற்றுமையுடன் செயல்பட வலியுறுத்தினார். 
பிறகு தோழர்கள் இருதயராஜ், என் பாலசுப்பிரமணியன் 2, நடராஜன், கைலாசம், புருஷோத்தமன், அய்யனார், ஆறுமுகம் தோழியர் தங்கம் சேவியர், மல்லிகா சுகுமாரன், ஆகியோர் நமது சங்கத்தின் செயல்பாட்டினையும், உண்ணா நோன்பின் அவசியத்தையும் நாம் ஒற்றுமையுடன் சாதிக்க வேண்டிய செயல்கள் பற்றியும்  உரை நிகழ்த்தினார்கள். 
சரியாக  மதியம்  12 முப்பதுக்கு  கோஷங்கள்  தோழர்கள் பட்டுக்கோட்டை சிவசிதம்பரம் மற்றும் தஞ்சை கே சந்தானகோபாலன் சங்கத்தின் கோஷங்களை முழங்கிட அனைத்து உறுப்பினர்களும் விண்ணதிர கோஷமிட்டு சிறப்பிதார்கள்.
மதியம் தோழர்கள் சந்தான கோபாலன், நடராஜன் ,மாவட்ட தலைவர் ஏ கே  டி மற்றும் மாவட்ட செயலர் சாமிநாதன் அனைவரும் நமது ஆரம்ப காலத்திலிருந்து அதாவது பி அண்ட் டி காலம் தொட்டு  இன்றைய பிஎஸ்என்எல் வரை நடந்த சங்கங்கள் அமைப்பினையும் செயல்பாடுகளையும் விளக்கி கூறியதோடல்லாமல் இன்றைய நிலையில் நாம் ஒரு சீனியர் சிட்டிசன் ஆக செயல்படவேண்டிய காரண காரியங்களையும் விளக்கிப் பேசினார்கள். 
மதியம் தோழர் ஜெயபாரதி அவர்கள் நகைச்சுவையோடு உரையாற்றி உண்ணாவிரத போராட்டம் வெற்றிபெற  உரை நிகழ்த்தினார்கள். 
மழை புயல் பாதிப்பு இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் அதிகம் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து இருப்பார்கள் என்ற ஒரு குறையை தவிர உண்ணாவிரத போராட்டம் சிறப்பாக நடைபெற்றது. 
அய்யனார் உண்ணாநோன்பு போராட்டத்தின் தீர்மானத்தை வாசிக்க அனைவராலும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 
அந்த தீர்மானம் மத்திய சங்கத்தின் ஆணைப்படி DOT க்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
சரியாக மாலை 5 மணிக்கு தோழர் பிரான்சிஸ் சேவியர் உண்ணா நோன்பினை முடித்து வைத்தார். 
தோழர் கே .சீனு பொருளாளர் நன்றி கூறி போராட்டத்தினை நிறைவு செய்தார். 

போராட்டக் காட்சிகள்:




















Thursday, November 15, 2018


மறைந்தார் மத்திய அமைச்சர் 
அனந்தகுமார்!
தஞ்சை மாவட்டச் சங்கம் சார்பில் 12-11-18 அன்று இரங்கல் கூட்டம் நடைபெற்றது.  தோழர்கள் மற்றும் தோழியர்கள் பங்கேற்று 
அஞ்சலி செலுத்தினார்கள்.





Thursday, November 8, 2018


நமது மாதாந்திரக் கூட்டம் வருகிற 10-11-18
சனிக்கிழமை காலை 10 மணிக்கு தஞ்சை
மேரிஸ் கார்னர் இணைப்பகத்தில் 
வழக்கம் போல் நடைபெறும்.

மாநிலச் செயலர் தோழர். 
R. வெங்கடாச்சலம் அவர்கள் 
பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.

தோழர்கள் தவறாது பங்கேற்று 
சிறப்பிக்க வேண்டுகிறேன்.

தோழமையுடன், 
V. சாமிநாதன்,
மாவட்டச் செயலர், தஞ்சை. 
BE ALERT!!
CYBER CRIMINALS HAVE NOW TARGETED RETIRED PENSION HOLDERS! 
THEY MAKE PHONE CALLS, EVEN IN LAND LINE,STATING THE PENSION HOLDER THAT HE HAS AN AMOUNT FOR RS. 332590/- LYING WITH S. G. I. FUND AND REQUESTING TO SEND SELF SIGNED COPY OF PAN, AADHAR, PHOTOCOPY OF 1ST PAGE OF PPO BOOK, ONE UNSIGNED CANCELLED CHEQUE WITH 2 COPIES PASSPORT SIZE PHOTOGRAPHS BY SPEED POST IN THE GIVEN ADDRESS SO THAT THE CASH CAN BE CREDITED DIRECTLY TO THE BANK. 
THEY ALSO SHARE NAMES AND PHONE NUMBERS TO ESTABLISH THEIR GENUINENESS. 
PLEASE SHARE WITH ALL RETIRED PERSONS YOU KNOW.

(Forwarded as received from a present Dy.Manager-CPPC)

எச்சரிக்கை!
===========
( தமிழாக்கம்: சிவசிதம்பரம் )
சைபர் குற்றவாளிகளின் தற்போதைய இலக்கு பணி ஓய்வு பெற்று பென்ஷன் வாங்குபவர்கள். அவர்கள் தனது தரைவழி தொலைபேசியில் போன் செய்து பென்ஷன் வாங்குபவரின் அக்கவுண்டில் ரூ. 3,32,590 GSI நிதியில் இருப்பதாகவும், இதைப்பெற சுய கையெழுத்திட்ட PAN CARD நகல், ஆதார் நகல், PPO BOOK ன் முதல் பக்க நகல், ஓர் கையெழுத்திடாத
ரத்து செய்யப்பட்ட காசோலை, மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள் - இவற்றை கொடுக்கப்பட்ட முகவரியில் துரித தபால் சேவை மூலம் அனுப்பினால் - மேல்சொன்ன தொகை நமது வங்கிக்
கணக்கில் சேர்க்கப்படும். அவரின் பெயர் மற்றும் தொலைபேசி
எண்களும் கொடுக்கப்படுகிறது.
( எனவே பணி ஓய்வு பெற்றவர்கள் கவனமாக இருக்கவும்).

( தற்போதுள்ள Deputy Manager cppc ன்
தகவல் அப்படியே வழங்கப்பட்டுள்ளது).