LIVE

Sunday, April 14, 2019


AIBSNLPWA தஞ்சை மாவட்டம். 
மாதாந்திர கூட்டம் - 13-04-19
=======================================================
அன்பு தோழர்களே, தோழியர்களே, அனைவருக்கும் வணக்கம்! .
      காலை சரியாக பத்து முப்பது மணிக்கு தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் சுமார் 150 தோழர்கள், தோழியர்கள் கலந்துகொண்ட மாதாந்திரக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. 
மாவட்டத் தலைவர் தோழர் மதுரை ராஜேந்திரன் தலைமை ஏற்க. தோழர் வி.சாமிநாதன் மாவட்ட செயலர் முன்னின்று நடத்த, தோழர் ஏ.கே. தனபாலன் கடவுள் வாழ்த்து இசைத்திட, தோழர் க.அய்யனார் இணைச் செயலர் வரவேற்புரை நிகழ்த்தினார். 
தோழர் பிரின்ஸ்  செயல் தலைவர், தோழர் ஏ.கே. தனபாலன் கௌரவ தலைவர் மற்றும் தோழர் பிரான்சிஸ் சேவியர் மாநில அமைப்புச் செயலர் ஆகியோர் சங்க செயல்பாடுகள் பற்றி வாழ்த்தி பேசினார்கள். தோழர் வி. சாமிநாதன் மாவட்ட செயலர் வருகின்ற மாதாந்திர பொதுக்கூட்டத்தில் 1968 போராட்டத்தில் பங்குபெற்று விழுப்புண் பெற்ற தோழர்கள், தோழியர்களை வருகின்ற மாதாந்திர பொதுக்கூட்டத்தில் சிறப்பிப்பது பற்றியும், நமது மாவட்ட சங்க ஓய்வூதியர் கதிரவன் இருபத்தைந்தாவது பதிப்பு அடுத்த மாதம் வெள்ளி விழா கொண்டாட்டமாக அமைய இருப்பதால், அதற்கு நமது தோழர் கே. முத்தியாலு  மத்திய சங்க துணைத் தலைவர், அவர்களை அடுத்த பொதுக்கூட்டத்திற்கு அழைத்து சிறப்பாக நடக்க இருப்பதாக அறிவித்தார்கள். மற்றும் இன்றைய மாவட்ட சங்க செயல்பாடுகள் பற்றியும் சிறப்பாக உரையாற்றி நிறைவு செய்தார். 
தோழர் கே. சந்தானகோபாலன் மாவட்ட  துணைத் தலைவர் அவர்கள் தற்போதைய ஐடிஏ, எம் ஆர் எஸ் பேமெண்ட் பற்றியும், சாம்பென் பற்றிய செய்திகளையும், நமது ஓய்வூதிய மாற்றத்தின் இன்றைய நிலையைப் பற்றியும், நமது சங்கத்திற்கு நிலுவை இல்லாமல் சந்தா செலுத்த வேண்டிய அவசியத்தையும், மாவட்ட சங்கத்தின் மாண்புகளையும், அது திறம்பட செயல்படுகின்ற விதத்தினையும், மற்ற கிளைகளுக்கு முன்னுதாரணமாய் நாம் நடப்பது பற்றியும் சிறப்பானதொரு உரையாற்றி நிறைவு செய்தார். 
தோழர் எம் இருதயராஜ் ஆன்மீக, மருத்துவ குறிப்புகளை பகிர்ந்தார். பிறகு இந்த மாதம் பிறந்தநாள் அமையப்பெற்ற தோழர் தோழியர்களின் பிறந்தநாள் விழாவும், சென்ற மாதம் ஓய்வு பெற்ற 3 தோழர்களின் 
மணி விழாவும் வழக்கம்போல் சந்தன மாலை அணிவித்து, ஆளுயர ரோஜா மாலைகள் அணிவிக்கப்பட்டு, கேக் வெட்டப்பட்டு, அவரவர் குடும்ப உறுப்பினர்களுடன் வாழ்த்து கோஷங்கள் முழங்க, இனிதாக மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 
மணி விழா கொண்டாடிய தோழர் மோகன் மற்றும் தோழர் மேகநாதன் தங்களது ஏற்புரையில் நமது சங்கத்தின் செயல்பாட்டினை பற்றி சிலாகித்து பேசி தங்களது மகிழ்ச்சியினை குடும்பத்தினருடன் பதிவு செய்தனர். தோழியர்  மல்லிகா சுகுமாரன் சென்ற மாதம் நடைபெற்ற உலக மகளிர் தினத்திற்கு ஒத்துழைத்த அனைத்து சங்க உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார். 
முடிவாக எம் கணேசன் அலுவலக செயலர் நன்றி நவில, மதிய விருந்துடன் கூட்டம் இனிதே முடிவடைந்தது. 
தோழர் கே சந்தானகோபாலன் துணைத் தலைவர் விழாவின் புகைப்படங்கள் தொகுப்பினையும், விழா காணொளியையும் தயாரித்து நமது சங்கத்தின் சார்பாக பதிவு செய்தார்கள்.
தோழமை வாழ்த்துக்களுடன்,
வி. சாமிநாதன்,
மாவட்ட செயலர்,
தஞ்சை மாவட்டம்