AIBSNLPWA - தஞ்சை மாவட்டம்.
மாதாந்திரக் கூட்டம் - 12-01-19
இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தோழர் எம். ராஜேந்திரன் தலைமை ஏற்க, தோழர் ஏ.கே. தனபாலன் கௌரவத் தலைவர், தோழர் பிரின்ஸ் செயல் தலைவர், தோழர் பிரான்சிஸ் சேவியர்
மாநில அமைப்புச் செயலர், தோழர் டி. முருகேசன் மாநில துணைப் பொருளாளர் ஆகியோர் முன்னிலை வகிக்க
தோழர் வி.சாமிநாதன் மாவட்டச் செயலர் முன்னின்று கூட்டத்தை வழி நடத்தினார்.
முதலில் தலைவர் திருக்குறள் வாசிக்க, தோழியர் சாரதா சந்தானகோபாலன் கடவுள் வாழ்த்து பாட, தோழர் பி. எஸ். மூர்த்தி அனைவரையும் வரவேற்று வரவேற்புரை
ஆற்றினார் .
140
தோழர்களும் தோழியர்களும் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர். அடுத்து
தோழர் கே சந்தானகோபாலன் உபதலைவர் மாவட்ட,
மாநில, அனைத்திந்திய செய்திகளை தொகுத்து
வழங்கினார். தனது உரையில் சென்ற மாதம் நடந்த மாவட்ட மாநாடு, பென்சனர் தின
கொண்டாட்டம், ஆங்கில புத்தாண்டில் தஞ்சை ஜிஎம் அவர்களை
சந்தித்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டது, IDA உயர்வு 3.2%, எம் ஆர் எஸ் தற்போதைய நிலை, SAMPENN
Software மற்றும் CPMS செயல்பாடு பற்றியும், அதன் சாதக பாதகங்களை பற்றியும், IIMஅகமதாபாத்
Interim ரிப்போர்ட் பற்றியும் மாவட்ட whatsapp குரூப்பில் எப்படி விஷயங்களை பகிர்ந்து
கொள்ள வேண்டும் என்றும் விளக்கி சிறப்புரை
ஆற்றினார்.
தோழர் பிரான்சிஸ் சேவியர் மாநில அமைப்புச் செயலர் மார்ச் மாதம் நடக்கவிருக்கும் மகளிர் தின விழாவைப் பற்றியும்,
சிறப்பு விருந்தினர்கள் அழைப்பது பற்றியும், சங்க சந்தாவை தவறாமல் அளிக்க
வற்புறுத்தியும் உரையாற்றினார்கள்.
தோழர் ஏ.கே. தனபாலன் கௌரவத்
தலைவர் நமது சங்க புது நிர்வாகிகளை வாழ்த்தியும், நமது தஞ்சை மாவட்ட சங்கத்தின் சிறப்புகளையும்,
மாவட்ட செயலர் சாமிநாதனின் திறன்மிகு செயல்பாட்டினையும்
வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.
தோழர் இருதயராஜ் பொது
சிந்தனை, ஆன்மீக சிந்தனை, மருத்துவ சிந்தனை,
அறிவியல் சிந்தனை பற்றி உரையாற்றினார்.
தோழர் பிரின்ஸ் செயல்
தலைவர் மாவட்ட செயலர் சாமிநாதனின் திறன்மிகு
செயல்பாட்டினை பாராட்டி பேசினார்.
தோழர் கே எஸ் கே நமது சங்கத்தின் குறிக்கோள்
பற்றியும் pension revision பெறுவதில் உள்ள இடர்பாடுகளை பற்றியும் அதை ஒற்றுமையுடன் செயல்படுத்தவேண்டிய காரண காரியங்களையும் விளக்கி வலியுறுத்திப் பேசினார்.
தோழர் நாகராஜன் pension ரிவிஷன் மற்றும் எம்
ஆர் எஸ் பெறுவதில் உள்ள சிக்கல்களை விளக்கி பேசினார்.
தோழர்
ராஜேஷ் நமது கூட்டத்தில் கலந்து கொள்வதில் புத்துணர்வு பெறுவதாகும், மாவட்ட
செயலருக்கு தகுந்த ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
தோழர் இளங்கோவன் அவர்கள், தலைவர்
மதுரை எம் ராஜேந்திரன், கௌரவத் தலைவர் ஏ.கே.தனபாலன், மாவட்ட செயலர் சாமிநாதன், மாவட்ட பொருளாளர் கே
.சீனு, ஆகிய தோழர்களின் செயல்பாட்டினை பாராட்டி
பொன்னாடை அணிவித்து கௌரவித்தார் .
தோழர் நடராஜன் பென்ஷன் பத்திரிக்கை பற்றியும்,
பட்டுக்கோட்டை கிளை
புதிதாக அமைக்கப்பட்டது பற்றியும், ஏடிஎம் கார்டு செயல்பாடு பற்றியும், கேபிள்
ஆப்பரேட்டர் விருப்பப்பட்ட சேனல்களை தேர்வு செய்வது பற்றியும், இன்கம்டாக்ஸ் பற்றியும்,
நாட்டு நடப்புகள் பற்றியும் விளக்கமாக பேசினார்.
புருஷோத்தமன் மருத்துவ குறிப்புகளைப் பற்றி உரையாற்றினார் தோழர் அய்யனார் இணைச்
செயலர் உறுப்பினர்களுக்கு
புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து நமது சங்க செயல்பாடுகள் பற்றியும், மகளிர் தினம் சிக்கனமாக சிறப்பாக நடத்துவது
பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றும்
கூறி உரையை நிறைவு செய்தார்.
தோழியர்
மல்லிகா சுகுமாரன் புத்தாண்டு பொங்கல் தின
வாழ்த்துக்கள் கூறி
அனைத்து புதிய நிர்வாகிகளையும் வாழ்த்தி உரையாற்றினார். மாவட்ட செயலர் சாமிநாதன் பட்டுக்கோட்டை கிளைச் செயலர் தோழர் நாடிமுத்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து
கவுரவித்தார். தோழர்
பஞ்சாபிகேசன் மனம்விட்டு சிரித்தால் நோய்கள் விடுபட்டுப் போகும்,
கவலைகளை மறந்து சிரித்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பது
பற்றி உரையாற்றினார்.
அடுத்து மாவட்ட செயலர் சாமிநாதன் pension revision எம் ஆர் எஸ் இரண்டிலும் நாம் அனுபவபூர்வமாக பெற்று
வரும் சிக்கல்களையும் அதை நாம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் தெளிவாக
எடுத்துரைத்தார்.
அனைவரும்
வருகிற ஏப்ரல் 1 லிருந்து வித்தவுட் வவுச்சரிலிருந்து
வித் வவுசருக்கு ஆப்ஷன் கொடுத்தால் நலம்
பயக்கும் என்றும் வருகிற 14 3 2019 அன்று நடைபெற இருக்கிற மகளிர்
தின விழா, மத்திய சங்க நிர்வாகிகளுக்கு
பாராட்டு விழா மற்றும் பி எஸ் என் எல் குடும்ப நல விழா பற்றியும் சிறந்ததொரு உரையாற்றினார்.
பிறகு இந்த மாதம் பிறந்தவர்களின் பிறந்தநாள்
விழா மற்றும் சென்ற மாதம் ஓய்வுபெற்ற தோழரின் மணிவிழா ஆகியன
வழக்கம்போல் கேக் வெட்டி, ரோஜா மாலை, சந்தன மாலைகள் அணிவிக்கப்பட்டு
வாழ்த்து கோஷங்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தோழர் டி. முருகேசன் மாநில துணைப் பொருளாளர் நன்றி நவில கூட்டம் மதிய தஞ்சை பாரம்பரிய இன்சுவை உணவுடன் இனிதே
நிறைவுற்றது.
வாழ்த்துக்களுடன்,
வி .சாமிநாதன் ,
மாவட்ட செயலர் ,
தஞ்சை.