LIVE

Friday, January 25, 2019

இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய  மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்தி அணிவகுப்பும் நடைபெறும்.
இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.
வாழ்க பாரதம்!!!! ஜெய்கிந்த்!!!

Wednesday, January 23, 2019

 வி. சாமிநாதன், மாவட்டச் செயலர், தஞ்சை.
==============================================

மத்தியில் மாண்புமிகு ஏ.பி. வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்றபோது, ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 60 ஆக உயர்த்தினார்கள். இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களால் ஜனநாயக சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் அன்றைக்கு பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது.

வாஜ்பாய் தலைமையில் அமைந்த அரசு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கென்றே ஒரு துறையை உருவாக்கி அதற்கு "பொதுத்துறை பங்கு விற்றல் துறை"உருவாக்கப்பட்டு அதற்கு மாண்புமிகு அருண்ஷோரி அவர்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டார். நம்முடைய தொலை தொடர்புத் துறையை, பொதுத்துறை நிறுவனமாக மாற்ற அரசு கடுமையான முயற்சிகள் மேற்கொண்டது. அப்பொழுது மரியாதைக்குரிய நம் அனைவரின் நினைவுகளில் வாழும் தோழர் ஓ.பி.குப்தா NFTE, தோழர் கே. வள்ளிநாயகம் FNTO, தோழர். மல்லிகார்ஜுனா BTEF  பொதுச்செயலாளர்களாக இருந்தனர். மேலும் JETA, TESA, மற்றும் ITS அதிகாரிகள் சங்கங்களும் இருந்தன. அப்போது,தொலைத்தொடர்புத் துறையின் அமைச்சராக மாண்புமிகு ராம் விலாஸ் பஸ்வான் அவர்கள் இருந்தார். பொதுத்துறை நிறுவனமாக மாற்றும் முயற்சியை அனைவரும் எதிர்த்தனர், ITS அதிகாரிகளை தவிர. மத்திய அரசு திடீரென்று ஒரு நாள் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் மும்பையையும் டெல்லியையும் இணைத்து, MTNL என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனம் உருவாக்கப்பட்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் DOT, DPS அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. தொழிற்சங்கங்கள் எல்லாம் பொதுத்துறை நிறுவனமாக ஆக்குவதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். அரசுத் தரப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் DOT இல் பணியாற்றிய காலத்திற்கு மட்டும் ஓய்வூதியம் தரப்படும், பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்ட பிறகு அனைவரும் புதிதாக பணியில் அமர்த்தப்பட விருப்பம் தெரிவிக்க வேண்டும், பொதுத்துறையில் பணியாற்றுவதால் ஓய்வூதியம் கிடையாது,  இது மத்திய அரசின் கொள்கை முடிவு, இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

நம் தலைவர்கள் ஒன்று கூடி மூன்று சம்மேளனங்களின் சார்பாக 2000 ம் ஆண்டில் செப்டம்பர் 6 முதல் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பை கொடுத்தனர்.   அரசாங்கம் தொழிற்சங்க தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மாண்புமிகு அமைச்சர்களான ராம்விலாஸ் பாஸ்வான், S.N. சின்ஹா, மத்திய நிதியமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, முரசொலி மாறன், க்ஷாட்டியா, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆகிய 5 பேர்கள் கொண்ட அமைச்சரவை குழு  நியமிக்கப்பட்டது. போராட்ட அறிவிப்புக்கு பின் அறிவிக்கப்பட்ட ஐவர் குழுவினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. தொலைத்தொடர்பு துறையில் ITS அதிகாரிகளை தவிர அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் செப்டம்பர் 6  நள்ளிரவில் தொடங்கிய போராட்டத்தில் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டார்கள். அரசின் அறிக்கையின்படி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 95% ஆகும். நாம் போராட்டம் துவங்கிய நேரத்தில் நம்முடைய பிரதமர் மாண்புமிகு ஏ.பி. வாஜ்பாய் அவர்கள் வாஷிங்டனில் அன்னிய முதலீட்டார்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றிருந்தார். முதலீட்டாளர்கள் மத்தியில் முதலீடு செய்வதற்கும் தொழில் தொடங்குவதற்கும் அமைதியான சூழல் இந்தியாவில் உள்ளது. எனவே, இந்தியாவில்  தொழில் தொடங்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார். அந்தக் கூட்டத்திற்குப்  பிறகு உலக நிருபர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்தியாவில் தொலை  தொடர்புத் துறையில் நடைபெற்றுவரும் போராட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக பாஸ்டன் நகரிலிருந்து ஒரு நிருபர் NFTE சம்மேளன அலுவலகத்தை தொடர்புகொண்டு தோழர் ஓ.பி. குப்தாவிடம் போராட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முயன்றார். தோழர் ஓ.பி. குப்தா அவர்கள் வேறு முக்கிய பணியில் இருந்த காரணத்தால் தோழர் கே. வள்ளி நாயகத்திடம் பேசுமாறு நிருபர்களிடம் கேட்டுக்கொண்டார். தோழர் ஓ பி குப்தா அவர்கள் இந்த செய்தியினை தோழர் வள்ளி நாயகத்திற்கு தெரியப்படுத்தினார். தோழர் வள்ளிநாயகம் குப்தாவின் ஆலோசனையின் பேரில் பாஸ்டன் நிருபரிடம் போராட்டம் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிவித்தார்.
இதற்கிடையில் போராட்டம் துவங்கியபின், BTEF சம்மேளன பொதுச் செயலாளர் தோழர் மல்லிகார்ஜுனா அவர்கள் அவசர பணிகள் இருப்பதாக கூறிவிட்டு, தோழர் எஸ்.பி.ஷர்மா என்பவரை சம்மேளனம் சார்பாக பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வார் என்று சொல்லிவிட்டு ஆந்திராவிற்கு சென்று விட்டார். பின்  ஏழாம் தேதி மாலையில் பி ஜே பி -இன் தூண்டுதலால் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது  என அறிக்கை வெளியிட்டார். அறிக்கை வெளியிட்ட பிறகு போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் எண்ணிக்கை 99% ஆக உயர்ந்தது. வாஷிங்டனில் நிருபர் கூட்டத்தில் இருந்த பாரதப்பிரதமரிடம் பாஸ்டன் நிருபர் இந்தியாவில் இரண்டு நாட்களாக தொலைதொடர்பு துறையில் நடைபெறும் போராட்டத்தால் தொலைதொடர்பு சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது பற்றி உங்களுக்கு தெரியுமா என கேள்வி எழுப்பினார்.

பாரதப் பிரதமர் அவர்கள், அமைச்சரின் செயலாளராக இருந்த கேரளா ஐஏஎஸ் அதிகாரி திரு. நாராயணன் அவர்களை தொடர்பு கொண்டு தொலை தொடர்பு துறையில் நடைபெறும் போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருமாறு உத்தரவிட்டார். உடனடியாக ஐந்து பேர் கொண்ட அமைச்சரவை குழுவினருடன் நம்முடைய தலைவர்கள் ஓ பி குப்தா NFTE, கே வள்ளிநாயகம் FNTO, எஸ். டி. ஷர்மா BTEF ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்றனர். பேச்சுவார்த்தையில் CCS PENSION தான்,  அனைவரும் BSNL  க்கு விருப்பம் தெரிவிக்க வேண்டும். CCS PENSION  விதிப்படி 1972 திருத்தம் சரி  செய்யப்பட்டு பணிக்காலம் முழுமைக்கும் ஓய்வு ஊதியம் வழங்கப்பட வேண்டும். அதுவும் மத்திய அரசின் CONSOLIDATED FUND OF INDIA  விலிருந்து (ஓய்வூதிய தொகுப்பு நிதி),  ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற உத்திரவாதத்தை எழுத்துப் பூர்வமாகவும், பாராளுமன்ற ஒப்புதலோடும், மத்திய  அரசிதழில் வெளியிட்டு அனைத்து விதமான பாதுகாப்புகளையும் நமக்கு பெற்றுத் தந்தார்கள். ஒப்பந்தத்தில் NFTE சம்மேளத்தின் சார்பாக தோழர் ஓ.பி. குப்தா, FNTO சம்மேளன செயலாளர் இளம் தலைவர் தோழர் கே. வள்ளிநாயகம்  மற்றும் BTEF சார்பாக தோழர் S.D. ஷர்மா அவர்களும் வரலாற்றுச்  சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் இன்று நாம் ஓய்வூதிய பலன்களை அனுபவித்து வருகின்றோம். இந்த வெற்றியை உறுதியோடு போராடிய தோழர்களுக்கும், நம்மை வழி நடத்திய தலைவர்களுக்கும் சமர்ப்பணம் செய்வோம். 
சேலம் தோழர் ரமணி குறிப்பிட்டதைப் போல அகில இந்திய BSNL ஓய்வூதியர்கள் நல சங்கம் பல ஊர்களிலிருந்து சங்கமிக்கும் "ஓர் பறவைகளின் சரணாலயம்."  இந்த சரணாலயம் அமைந்த இடத்தில் உள்ள மக்கள் விருப்பு, வெறுப்பு, சந்தோஷங்களை புறந்தள்ளி பண்டிகை காலங்களில் வெடிகளை கூட வெடிக்க மாட்டார்கள். 
வெடி வெடித்தால் பறவைகள், சரணாலயத்தில் ஒன்றாக இருக்க முடியாது என்பதால்...

அன்பு நண்பர்களே! அனைத்து தலைவர்களையும் நினைவில் கொள்வோம். அகில இந்திய BSNL ஓய்வூதியர்கள் நலச் சங்கத்தில் அனைவரையும் மனமுவந்து ஒன்றிணைப்போம்.  செயல்படுவோம்.

வாழ்த்துக்களுடன்,

வி. சாமிநாதன்,
மாவட்ட செயலர்,
AIBSNLPWA, தஞ்சை.

Sunday, January 13, 2019


இன்று மதியம் சரியாக 2:30 மணி அளவில் இந்த ஆண்டிற்கான முதல்  செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் எம்ராஜேந்திரன் தலைமையில்நடைபெற்றது.
40க்கும் மேற்பட்ட தோழர்களும், தோழியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
மாவட்ட செயலர் தனது முன்னுரையில் வருகின்ற 14-3-2019 வியாழக்கிழமை தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள கல்லுகுளம் பகுதியில் அமைந்துள்ள மக்கள் மன்றத்தில், நடைபெற இருக்கும் உலக மகளிர் தினம், மத்திய சங்க தலைவர்கள் பாராட்டு விழா, மற்றும்  உறுப்பினர்கள் குடும்ப விழா நடத்துவது பற்றியும், அது சம்பந்தமான ஆலோசனைகளையும் திட்டங்களையும் வகுப்பதற்காக இந்த செயற்குழு கூட்டம் கூட்டியிருப்பதாகவும் அங்கத்தினர்கள் அனைவரும் தங்களது ஆலோசனைகளை கூறுமாறு அழைப்பு விடுத்தார்.  மாவட்ட தலைவர்கௌரவத் தலைவர்செயல் தலைவர்மாநில சங்க அமைப்பு செயலாளர், மாநில சங்க துணைப் பொருளாளர் மற்றும் கூடியிருந்த அனைத்து செயற்குழு உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்
தோழர்கள் பிரின்ஸ், பி எஸ் மூர்த்திஅய்யனார்சிவசிதம்பரம்தோழியர் செந்தாமரை, பத்மினி, மல்லிகா சுகுமாரன் ஆகிய உறுப்பினர்களை கொண்ட திட்டமிடுதல் குழுவை அனைத்து உறுப்பினர்களின் ஒப்புதலோடு செயலர் சாமிநாதன்  அமைத்தார்

வருகின்ற பிப்ரவரி மாதம் இரண்டாம் சனிக்கிழமை நடக்கின்ற மாதாந்திர பொதுக்கூட்டத்தில் குழந்தைகளுக்கான போட்டிகளை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

தவிரவும் 14-3-2019 அன்று காலையில் நமது மத்திய சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மற்றும் மகளிர் தின விழா நடத்துவது என்றும், மதிய உணவிற்குப்பின் சென்ற 19-9-1968 ல் நடைபெற்ற பெருமைமிகு போராட்டத்தில் பங்கு பெற்றவர்களை சிறப்பிப்பது மற்றும் குடும்ப விழாவிற்கான போட்டிகளை நடத்தி சிறப்பாக கொண்டாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது

உறுப்பினர்கள் விழாவிற்காக தாமாக முன்வந்து நன்கொடைகளை வழங்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது
மன்னார்குடி தோழர் கலியமூர்த்தி அவர்கள் ரூபாய் 501 முதன்முதலாக நன்கொடை கொடுத்து ஆதரவு நல்கினார்
தோழர் கைலாசம் ஒரு போட்டிக்கான 3 பரிசுகளை தான் தருவதாக உறுதியளித்தார்

இந்தக் கூட்டம் சம்பந்தமான முடிவுகளை அவ்வப்பொழுது குழு உறுப்பினர்கள் தங்களுக்குள் கலந்து ஆலோசித்து வழி வகுத்திட வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இறுதியாக தோழர் K. சீனு மாவட்ட பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது

தோழமையுடன்
வி. சாமிநாதன் ,
மாவட்ட செயலர் ,
தஞ்சை. 



AIBSNLPWA - தஞ்சை மாவட்டம்.
மாதாந்திரக் கூட்டம் - 12-01-19 

இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டத்திற்கு  மாவட்டத் தலைவர் தோழர் எம். ராஜேந்திரன் தலைமை ஏற்க, தோழர் .கே. தனபாலன் கௌரவத் தலைவர், தோழர் பிரின்ஸ் செயல் தலைவர், தோழர் பிரான்சிஸ் சேவியர் மாநில அமைப்புச் செயலர், தோழர் டி. முருகேசன் மாநில துணைப் பொருளாளர் ஆகியோர் முன்னிலை வகிக்க தோழர் வி.சாமிநாதன் மாவட்டச் செயலர் முன்னின்று கூட்டத்தை வழி நடத்தினார்
முதலில் தலைவர்  திருக்குறள் வாசிக்க, தோழியர்   சாரதா  சந்தானகோபாலன் கடவுள் வாழ்த்து பாட, தோழர் பி. எஸ். மூர்த்தி அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்
140 தோழர்களும் தோழியர்களும் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர். அடுத்து தோழர் கே சந்தானகோபாலன் உபதலைவர்  மாவட்ட, மாநில, அனைத்திந்திய செய்திகளை தொகுத்து வழங்கினார். தனது உரையில் சென்ற மாதம் நடந்த மாவட்ட மாநாடு, பென்சனர் தின கொண்டாட்டம், ஆங்கில புத்தாண்டில்  தஞ்சை ஜிஎம் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டது,  IDA உயர்வு 3.2%, எம் ஆர் எஸ் தற்போதைய நிலை, SAMPENN Software மற்றும் CPMS செயல்பாடு பற்றியும், அதன் சாதக பாதகங்களை பற்றியும், IIMஅகமதாபாத் Interim ரிப்போர்ட் பற்றியும் மாவட்ட whatsapp குரூப்பில் எப்படி விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் விளக்கி சிறப்புரை
ஆற்றினார். 
தோழர் பிரான்சிஸ் சேவியர் மாநில அமைப்புச் செயலர் மார்ச் மாதம் நடக்கவிருக்கும் மகளிர் தின விழாவைப் பற்றியும், சிறப்பு விருந்தினர்கள் அழைப்பது பற்றியும், சங்க சந்தாவை தவறாமல் அளிக்க வற்புறுத்தியும் உரையாற்றினார்கள்
தோழர் .கே. தனபாலன் கௌரவத் தலைவர் நமது சங்க புது நிர்வாகிகளை வாழ்த்தியும், நமது தஞ்சை மாவட்ட சங்கத்தின் சிறப்புகளையும், மாவட்ட செயலர் சாமிநாதனின் திறன்மிகு செயல்பாட்டினையும் வாழ்த்தி சிறப்புரையாற்றினார்
தோழர் இருதயராஜ் பொது சிந்தனை, ஆன்மீக சிந்தனை, மருத்துவ சிந்தனை, அறிவியல் சிந்தனை பற்றி உரையாற்றினார்
தோழர் பிரின்ஸ் செயல் தலைவர் மாவட்ட செயலர் சாமிநாதனின் திறன்மிகு செயல்பாட்டினை பாராட்டி பேசினார்
தோழர் கே எஸ் கே நமது சங்கத்தின் குறிக்கோள் பற்றியும் pension revision பெறுவதில் உள்ள இடர்பாடுகளை பற்றியும் அதை ஒற்றுமையுடன் செயல்படுத்தவேண்டிய காரண காரியங்களையும் விளக்கி வலியுறுத்திப் பேசினார்.
தோழர் நாகராஜன் pension ரிவிஷன் மற்றும் எம் ஆர் எஸ் பெறுவதில் உள்ள சிக்கல்களை விளக்கி பேசினார்
தோழர் ராஜேஷ் நமது கூட்டத்தில் கலந்து கொள்வதில் புத்துணர்வு பெறுவதாகும், மாவட்ட செயலருக்கு தகுந்த ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
தோழர் இளங்கோவன் அவர்கள், தலைவர் மதுரை எம் ராஜேந்திரன், கௌரவத் தலைவர் .கே.தனபாலன், மாவட்ட செயலர் சாமிநாதன், மாவட்ட பொருளாளர் கே .சீனு, ஆகிய தோழர்களின் செயல்பாட்டினை பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார் .
தோழர் நடராஜன் பென்ஷன் பத்திரிக்கை பற்றியும், பட்டுக்கோட்டை கிளை புதிதாக அமைக்கப்பட்டது பற்றியும், ஏடிஎம் கார்டு செயல்பாடு பற்றியும், கேபிள் ஆப்பரேட்டர் விருப்பப்பட்ட சேனல்களை தேர்வு செய்வது பற்றியும், இன்கம்டாக்ஸ் பற்றியும், நாட்டு நடப்புகள் பற்றியும் விளக்கமாக பேசினார்
புருஷோத்தமன் மருத்துவ குறிப்புகளைப்  பற்றி உரையாற்றினார் தோழர் அய்யனார் இணைச் செயலர் உறுப்பினர்களுக்கு புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து நமது சங்க செயல்பாடுகள் பற்றியும், மகளிர் தினம் சிக்கனமாக சிறப்பாக நடத்துவது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றும்  கூறி உரையை நிறைவு செய்தார்
தோழியர் மல்லிகா சுகுமாரன் புத்தாண்டு பொங்கல் தின வாழ்த்துக்கள் கூறி அனைத்து புதிய நிர்வாகிகளையும் வாழ்த்தி உரையாற்றினார். மாவட்ட செயலர் சாமிநாதன் பட்டுக்கோட்டை கிளைச் செயலர் தோழர் நாடிமுத்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். தோழர் பஞ்சாபிகேசன் மனம்விட்டு  சிரித்தால் நோய்கள் விடுபட்டுப் போகும், கவலைகளை மறந்து சிரித்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பது பற்றி உரையாற்றினார். 
அடுத்து மாவட்ட செயலர் சாமிநாதன் pension revision எம் ஆர் எஸ் இரண்டிலும் நாம் அனுபவபூர்வமாக பெற்று வரும் சிக்கல்களையும் அதை நாம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். 
அனைவரும் வருகிற ஏப்ரல் 1 லிருந்து வித்தவுட் வவுச்சரிலிருந்து வித் வவுசருக்கு ஆப்ஷன் கொடுத்தால் நலம் பயக்கும் என்றும் வருகிற 14 3 2019 அன்று நடைபெற இருக்கிற மகளிர் தின விழாமத்திய சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மற்றும் பி எஸ் என் எல் குடும்ப நல விழா பற்றியும் சிறந்ததொரு உரையாற்றினார்.
பிறகு இந்த மாதம் பிறந்தவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் சென்ற மாதம் ஓய்வுபெற்ற தோழரின் மணிவிழா ஆகியன வழக்கம்போல் கேக் வெட்டி, ரோஜா மாலை, சந்தன மாலைகள் அணிவிக்கப்பட்டு வாழ்த்து கோஷங்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது
தோழர் டி. முருகேசன் மாநில துணைப் பொருளாளர் நன்றி நவில கூட்டம் மதிய தஞ்சை பாரம்பரிய இன்சுவை உணவுடன் இனிதே நிறைவுற்றது

வாழ்த்துக்களுடன்,
வி .சாமிநாதன் ,
மாவட்ட செயலர் ,
தஞ்சை.













Friday, January 11, 2019


கஜா புயல் நிவாரண நிதி 
தோழர்களுக்கு நன்றியும் பாராட்டும்!! 
=======================================
நமது தஞ்சை மாவட்டத்தின்  சார்பாக 
கஜா புயல் நிவாரண நிதியாக ரூபாய்  1,11,741/- 
நமது தோழர்கள் அளித்துள்ளனர்.

கஜா புயலால் கடும் பாதிப்புக்கு ஆளான நமது மாவட்ட மக்களின்   துயர் துடைக்க நன்கொடை அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது சார்பாகவும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பாகவும் இதயபூர்வமான நன்றியினையும்  பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது மாநிலச் சங்கம் 8 லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட பொருட்களை வாரி வழங்கி, நம் மாவட்ட மக்களைக் காத்ததையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம்!!

அன்புடன்,
வி. சாமிநாதன்,
 மாவட்ட செயலர்,
 தஞ்சை.

Tuesday, January 8, 2019

தஞ்சை மாவட்டத்தின் 
முதல் கிளை துவக்க விழா 
==================
புதிய உதயம் பட்டுக்கோட்டை.
=============================
கடந்த 07-01-2019 அன்று பட்டுக்கோட்டையில் புதிய கிளை துவக்க விழா நடைபெற்றது.  எளிமையாக நடந்த இந்த விழாவிற்கு தோழர். N. வீரபாண்டியன் தலைமை வகித்தார்.
நமது மாவட்டச் செயலர் தோழர். வி. சாமிநாதன், மாநில அமைப்புச் செயலர் தோழர். பிரான்சிஸ் சேவியர், மாவட்ட அலுவலகச் செயலர் தோழர். M. கணேசன் மற்றும் பட்டுக்கோட்டை தோழர்கள், தோழியர்கள் 21 பேர் பங்கேற்றனர்.   
மாவட்டச் செயலர் தோழர் சாமிநாதன் அவர்கள் ஓய்வூதியர் நாளைப் பற்றி எடுத்துக் கூறினார். D.S. நகாராவை நினைவு கூர்ந்தும், அந்தப் பென்ஷனை அரசுப் பென்ஷனாக உறுதி செய்த தலைவர்கள் தோழர். O.P குப்தாவும், வள்ளிநாயகமும்தான் என்பதை நன்றியறிதலோடு எடுத்துக் கூறினார்.  மார்ச்சில் நடைபெறவிருக்கும் மகளிர் தின விழா முப்பெரும் விழாவாக நடக்கவிருப்பதையும், அதில் பொதுச் செயலாளர் கங்காதரராவ், மத்திய சங்க துணைத் தலைவர் தோழர். 
D. கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு பாராட்டு விழாவும், ஓய்வூதியர் குடும்ப தின விழா நடத்தவிருப்பதையும் எடுத்துக் கூறினார். இது பற்றிய உங்களின் சிந்தனைகளை 12-01-19 ல் நடக்கும் அவசர செயற்குழுவில் பகிர்ந்து கொள்ளவும் வேண்டினார். 
மாநில அமைப்புச் செயலர் தோழர். சேவியர் அனைவரையும் வாழ்த்தி, கூட்டங்களில் இன்னும் அதிகம் பேர் பங்கேற்பதும், கிளை பிரச்சினைகளை உடனுக்குடன் மாவட்டச் சங்கத்திற்கு தாருங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். 
மாவட்டச் சங்க பொறுப்பாளர் தோழர். கணேசன் அவர்கள், தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், ஒற்றுமையோடு கிளையை நடத்திச் செல்லுங்கள் என்றும்  வாழ்த்தினார்.
கூட்டத்தில் தோழர்கள் வீரபாண்டியன், லட்சுமணன், தங்கையன், நல்லதம்பி பிரபாகரன், சுந்தரராஜன், நாடிமுத்து ஆகியோரும் பேசினர். 
இறுதியாக கீழ்க்கண்ட தோழர்கள் பட்டுக்கோட்டை கிளையின் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
புதிய செயலர் தோழர். நாடிமுத்து நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. 

புதிய நிர்வாகிகள் பட்டியல் 

தலைவர்                                 : ஆர். ராஜேந்திரன் DGM

துணைத் தலைவர்கள்           : M. பிரபாகரன்.
                                                  V. தனராஜ் 

செயலர்                                 :  C. நாடிமுத்து PVN

துனைச் செயலர்கள்             : C. சுந்தரராஜன் 
                                                 G. ஹரிஹரன் 
பொருளர்                              : K. பன்னீர்செல்வம் 

துணைப் பொருளர்               : R. விஸ்வலிங்கம் MKR
அமைப்புச் செயலர்கள்         : N. ரவிச்சந்திரன் PVN
                                               : A. நாகராஜன் MKR
செயற்குழு உறுப்பினர்கள்    : A. சுப்பையன் PVN
                                                 M. ராஜேந்திரன் ARP 
                                                 G. சுதந்திராதேவி 
                                                 காலாவதி கருணாகரன்                      
                                                  V. தங்கராஜு TCB