LIVE

Sunday, December 9, 2018

மாவட்டச் செயலர் மடல்:


அன்புத் தோழர்களே! தோழியர்களே!!
                  அனைவருக்கும் வணக்கம்! சிறப்பு வாய்ந்த தஞ்சை மண்ணில் 
10-12-18 திங்கட்கிழமை இன்று முப்பெரும் விழாவினை சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

                  கடந்த 4 ம் தேதி கஜா புயல் பாதிப்புக்கு ஆளான பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளுக்கு 8 லட்சம் மதிப்பிலான பொருட்களை நமது மாநிலச் சங்கம் வாரி வழங்கியது. இதுவரை யாரும் அளித்திடாத அளவுக்கு பொருட்களை தேர்வு செய்து  குடும்பம் ஒன்றுக்கு 2000 ரூபாய் மதிப்பில் 400 குடும்பங்களுக்கு  வழங்கி நம் பகுதி மக்களுக்கு வழங்கிய பேருதவியாய் நன்றியோடு  நினைத்துப் பார்க்கிறோம்.

                 இந்த விழாவில் நமது 7வது மாவட்ட மாநாட்டினையும், ஓய்வூதியர் தின விழாவையும், பாராட்டு விழாவையும் இணைத்து நடத்துகின்றோம்.  தஞ்சை மாவட்டச் சங்கம் தனிச் சிறப்போடு பல காரியங்களை செய்ய முடிவது உங்களால்தான்  தோழர்களே! 

                 இந்த வேளையில் உங்களிடம் மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்கிறேன். தமிழகத்தில் 8 வது மாவட்டமாக நாமும் வலைத்தளம் துவங்குகிறோம். 

                 இன்றைக்கு அதை  நமது மாவட்ட மாநாட்டில் அகில இந்திய துணைத் தலைவர் தோழர். G. நடராஜன் அவர்கள் துவங்கி வைக்க இருக்கின்றார்கள். 

                  எனவே, தோழர்கள், தோழியர்கள் தவறாது, ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் உணர்வு பூர்வமாக பங்கேற்று  சிறப்பிக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

                  வாழ்த்துக்கள் தோழர்களே!

அன்புடன்,
வி. சாமிநாதன்,
தஞ்சை மாவட்டச் செயலர்,
AIBSNLPWA. 

No comments:

Post a Comment