சிறப்பாக நடைபெற்ற
ஓய்வூதியர் தின விழா!
======================
இன்று 17 12 2018 திங்கட்கிழமை இன்று நமது மாவட்டச் சங்கத்தின் சார்பில் ஓய்வூதியர் தின கூட்டம் தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் காலை சரியாக 10 மணிக்கு தொடங்கி பகல் 1 30 வரை சிறப்பாக நடைபெற்றது.
சுமார் 50க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள் பங்கு
பெற்று கூட்டத்தை சிறக்கச் செய்தனர்.
கௌரவத் தலைவர் தோழர் ஏகே தனபாலன் மற்றும் மாநில அமைப்புச் செயலர் பிரான்சிஸ் சேவியர் முன்னிலையில், முதல் நிகழ்வாக மதுரை எம் . ராஜேந்திரன் தலைவர் சங்க கொடியினை ஏற்றி வைக்க, சாமிநாதன் மாவட்ட செயலர் மற்றும் அய்யனார் இணைச் செயலர் விண்ணதிர கோஷமிட கூட்டம் இனிதே ஆரம்பம் ஆயிற்று.
தங்கம் சேவியர் கடவுள் வாழ்த்து பாட, தோழியர் எம் பத்மினி வரவேற்புரை ஆற்றினார்.
தலைவர் எம் ராஜேந்திரன் தனது முன்னுரையில் ஓய்வூதியர்கள் தின சிறப்பு பற்றி உரையாற்றி வாழ்த்துக்கள் கூறி நிறைவு செய்தார்.
தோழர் வி. சாமிநாதன் மாவட்ட செயலர் ஓய்வூதியர் தின முக்கியத்துவம் மற்றும் ஆரம்ப காலங்களில் இருந்து நடைபெற்ற நிகழ்வுகள் பற்றியும் சிறப்பானதொரு உரையாற்றினார்.
பிறகு K.அய்யனார் இணைச் செயலர் ஓய்வூதியர் தின காரண காரியங்களை விளக்கிப் பேச, மாநில அமைப்புச் செயலர் தோழர் பிரான்சிஸ் சேவியர், கௌரவ தலைவர் தோழர் எ கே தனபாலன் மற்றும் தோழர்கள் எம் இருதயராஜ், என் நடராஜன், என் பாலசுப்பிரமணியன் 2, ஜி பஞ்சாபிகேசன், தோழியர் மல்லிகா சுகுமாரன் ஆகியோர் ஓய்வூதிய தின சிறப்பு பற்றியும், வாழ்த்துக்களையும் கூறி உரையாற்றினார்கள். மாவட்டப் பொருளாளர் கே சீனு நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
தோழமை வாழ்த்துக்களுடன்,
V. சாமிநாதன்,
மாவட்ட செயலர், தஞ்சை.
Com.siva,
ReplyDeleteபுத்தாண்டு மகளிர்க்கு ஆடை அணிகலன்அணிவித்து அழகு பார்க்கின்ற தங்களுக்கு நன்றி.