LIVE

Sunday, May 19, 2019

10-02-19
AIBSNLPWA தஞ்சை மாவட்ட மாதாந்திர கூட்டம்

இன்று காலை சரியாக 10:30 மணிக்கு தொடங்கிய கூட்டம் கிட்டத்தட்ட 140 தோழர்கள், தோழியர்கள் கலந்து கொள்ள சிறப்பாக நடைபெற்றது
தோழர் மதுரை ராஜேந்திரன் தலைமை ஏற்க தோழர் ஏகே தனபாலன்  மற்றும் தோழர் பிரின்ஸ் செயல் தலைவர் முன்னிலையில் தோழர் வி. சாமிநாதன் மாவட்ட செயலர் கூட்டத்தினை சிறப்பாக நடத்தினார்
முதல் நிகழ்வாக சென்ற மாதக் கூட்டத்தில் இருந்து இந்த மாதம் கூட்டம் வரை உயிர் நீத்த தோழர்கள் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது ஆன்மா சாந்தி அடைய இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
அடுத்து தோழியர் அருட்செல்வி கடவுள் வாழ்த்து இசைத்திட தோழர் கே.அய்யனார் இணைச் செயலர் வரவேற்புரை நிகழ்த்திட கூட்டத்தினை தலைவர் தலைமையேற்று தொடர்ந்து நடத்தினார். தோழர் பிரின்ஸ் செயல் தலைவர் தனது உரையில் புதிதாக சென்ற மாதம் ஓய்வு பெற்று நமது சங்கத்தில் இணைந்த 11 அங்கத்தினர்களையும் வரவேற்று நமது சங்கத்தின் வழிமுறைகளையும் விளக்கி உரை நிகழ்த்தி அமர்ந்தார்
அடுத்து தோழர் கே டி கௌரவத் தலைவர் கூட்டத்தில் பங்கு பெற்றவர்களை வாழ்த்தி உரையாற்றியமர்ந்தார்
அடுத்து தோழர் என் நடராஜன் அவர்கள் நடப்பு பென்சனர் பத்திரிக்கையில் வந்த முக்கிய செய்திகளை தனது உரையில் அறிவித்து அமர்ந்தார்
அடுத்து தோழர் கே. சந்தானகோபாலன் துணைத் தலைவர், மாவட்ட மாநில அகில இந்திய நடப்புகளையும் செய்திகளையும் மற்றும் தற்போதைய சாம்பன், ஐடிஏ,எம் ஆர் எஸ் மற்றும் pension ரிவிஷன் பற்றியும் நமது மாவட்ட சங்கத்தின் சிறப்புகள் பற்றி நமது கங்காதர்ராவ் அவர்களால் பென்ஷனர் பத்திரிக்கையில் தொகுத்தளிக்கப்பட்ட தஞ்சை உலக மகளிர் தின கொண்டாட்ட சிறப்பு பதிப்புகளை  கூட்டத்தினருடன் பகிர்ந்துகொண்டு உரையை நிறைவு செய்தார்
அடுத்து தோழர் என் பாலசுப்பிரமணியன் 2 அவர்கள் சங்க செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார்
பிறகு தோழர் இளங்கோவன் மற்றும் தோழர் ராஜாராமன் சென்ற மாதம் ஓய்வுபெற்று இந்த மாதம் நமது சங்கத்தில் இணைந்தது குறித்து நமது சங்கத்தின் செயல்பாடுகளை சிலாகித்து பேசி அமர்ந்தனர்
சென்ற மாதம் ஓய்வுபெற்ற 11 அங்கத்தினர்களின் மணி விழாவும் இந்த மாதம் பிறந்தநாள் அமைந்திட்ட தோழர் தோழர்களின் பிறந்தநாள் விழாவும் வழக்கம்போல் சந்தன மாலைகள் அணிவிக்கப்பட்டு கேக் வெட்டப்பட்டு விண்ணதிர வாழ்த்து கோஷங்களுடன் மிகவும் இனிமையான சந்தோஷமான ஒரு சூழ்நிலையில் சிறந்த முறையில் கொண்டாடப்பட்டது
இறுதியாக தோழர் கே. சீனு பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.நிறைவேறியது. இன்றைய கூட்டத்தின் மதிய விருந்து தோழர் ராஜாராமன் ரிட்டயர்டு  டிஜிஎம் அவர்களால் வழங்கப்பட்டது.

தோழமை வாழ்த்துக்களுடன்,
வி .சாமிநாதன்,
மாவட்ட செயலர்,

தஞ்சை மாவட்டம்.

கூட்ட நிகழ்வு காட்சிகள்:





























No comments:

Post a Comment