LIVE

Friday, March 22, 2019

மீண்டும் நம் மண்ணில் கஜா புயல் நிவாரணம்
=======================================================================



நமது மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள கொறுக்கை நடுநிலைப் பள்ளிக்கட்டிடம்  கஜா புயலின் பாதிப்பால் வேரோடு சாய்ந்த ஆலமரம் போல் சாய்ந்து வீழ்ந்தது. 
அதை சரி செய்து, புதிய கட்டிடமாக சீரமைக்கும் கூட்டு முயற்சியில் நமது சென்னை மற்றும் தமிழ் மாநில ஓய்வூதியர் சங்கம் ஈடுபட்டு புதிய கட்டிடத்தை கடந்த 17-03-2019 அன்று பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. 
இரு மாநிலச் சங்க தலைவர்கள், திருச்சி  V.P. காத்தபெருமாள் உள்ளிட்ட மாநிலச் சங்க நிர்வாகிகள், நமது மாவட்டச் செயலர் தோழர். வி. சாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.   ஓய்வூதியர் நலம் மட்டுமல்ல சமூக நலத்திலும் நாம் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது இப் பேருதவி.
ஏற்கனவே, 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகைக்கான நிவாரணப் பொருள்களை பட்டுக்கோட்டை துவங்கி வேதாரண்யம் வரை வழங்கிய நமது சங்கம் இன்று ஐந்தரை லட்சம் ரூபாய் மதிப்பில் கொறுக்கை கிராம பள்ளிக்கட்டிடத்தை தேர்ந்தெடுத்து சீரமைத்துத் தந்தது நமக்கு பெருமையாக உள்ளது.  குழந்தைகளின் கல்வி நலனிலும் நமது இயக்கம் ஈடுபட்டு செய்த இச் செயல் அப்பகுதி மக்களால் பெரிதும் பாராட்டப்படும்போது செயற்கரிய செயலைச் செய்த நமது சங்கத்தின் தலைமையை பாராட்டாமல் இருக்க முடியாது.

வாழ்த்துக்களுடன்,
வி. சாமிநாதன்,
தஞ்சை மாவட்டச் செயலர்.







சிறப்பாக நடைபெற்ற விழாவில் அப் பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் நன்றியை பாடல் மூலமாகவும் கவிதை மூலமாகவும் தெரிவித்து மகிழ்ந்தனர் . 
எட்டாவது வகுப்பில் பயிலும் மாணவி ஜெனிதா அளித்த கவிதையினை உங்கள் பார்வைக்கு: 

 பத்திரிக்கைச் செய்திகள்:


















No comments:

Post a Comment