LIVE

Wednesday, January 15, 2020

*********************************
  புத்தாண்டு மற்றும் 
     பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
=============================
உழைப்பவன், உழுபவன் 
உலகிற்கோர் வரம்! -அதை 
உணர்ந்து வாழ்ந்திடல் 
நல்லோரின் தரம்.

கூட்டாய், குடும்பமாய் 
வாழ்ந்தவர்கள் நாம்! - அந்தக் 
கூட்டைக் கலைப்போரை
கொல்ல வேண்டாம்!  
கொட்டித் தீர்ப்போம், தேனீக்களாய்!

வளர்ந்த தேசம்  இந்தியா!
வல்லோர்களின் வழியில், வலியில் 
வாழ்வு பெற்றவர்கள் நாமெல்லாம்.
இனியுமா இப்படி! என்பதே கேள்வி.
வருந்திட வேண்டாமென்றால் 
திருந்திட வேண்டுமன்றோ!

தமிழ் கூறும் நல்லுலகின் 
திருவள்ளுவர் ஆண்டு 
துவங்கியது தையிலே! -அதைக்
கொள்வோம் நாம், சிந்தையிலே!  

ஆண்டின் ஆரம்பம் 
அறுவடை ஆகிடும்.
புத்தாண்டும், பொங்கலும் 
இணைந்து வரும் தையிலே 
நம் பிள்ளைகள் சிந்தையும் 
செழுமையுற விரும்புவோம்.

என்ன நிலை எடுப்போரும் 
என்ன விலை கொடுப்போரும் 
சொந்த தேச மக்களே!
இந்த நிலை வாரா வண்ணம்
மனங்களை ஊடுருவி,
மந்த நிலை போக்கிடுவோம்!

அனைவருக்கும் இனிய பொங்கல், 
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

அன்புடன் உங்கள்,
எஸ். சிவசிதம்பரம்.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::